செய்திகள் மலேசியா
கம்போங் ஜாவா தமிழ்ப்பள்ளி வகுப்பறையின் கூரை சரிந்து விழுந்தது மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்குவது: சசிதரன் கேள்வி
கிள்ளான்:
கம்போங் ஜாவா பத்து 4 தமிழ்ப்பள்ளி வகுப்பறையின் கூரை சரிந்து விழுந்தது.
சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்குவது என்று சிலாங்கூர் மாநில மஇகா தலைமைச் செயலாளர் எம். சசிதரன் கேள்வி எழுப்பினார்.
சிலாங்கூர் மாநில மஇகாவின் கல்விக் குழு தலைவர் பாண்டியன், கோத்தா ராஜா தொகுதி உதவித் தலைவர் சுப்பிரமணியம், கோத்தாராஜா கிளைத் தலைவர் ராஜ்சிங் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்றிருந்தேன்.
பள்ளியின் தலைமையாசிரியரை சந்தித்த்ததுடன் கூரை சரிந்து விழுந்த வகுப்பறையையும் பார்வையிட்டேன்.
சம்பவம் நிகழ்ந்த தினம் விடுமுறை என்பதால் வகுப்பறையில் மாணவர்கள் இல்லை.
ஒருவேளை பள்ளி நேரமாக இருந்திருந்தால் மாணவர்களின் நிலை மோசமாகி இருக்கும்.
அதேவேளையில் இப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்க போவது தான் அனைவரின் கேள்வியாக்கும்.
ஆக இச் சம்பவத்திற்கு கல்வியமைச்சு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் அனைத்து தமிழ்ப்பள்ளிகளின் நிலையை ஆராய பொதுப் பணித்துறைக்கு அது உத்தரவிட வேண்டும் என்று சசிதரன் வலியுறுத்தினார்.
இதனையே இப் பள்ளி மாணவர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மற்ற வகுப்பறைகளை ஆய்வு செய்ய ஒரு குத்தகையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் நம் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிப்போம்.
அவர்களின் கற்றல் சூழல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 10:45 pm
எரிபொருள், மின்சார விலைகள் குறித்து போலிச் செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: பிரதமர்
April 1, 2026, 8:48 pm
ஒரு லிட்டர் டீசல் விலை 6.02 ரிங்கிட்: இதுவே வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையாகும்
April 1, 2026, 8:46 pm
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் திருவள்ளுவர் சிலை: துணையமைச்சர் 7,000 ரிங்கிட் நிதி வழங்கினார்
April 1, 2026, 5:30 pm
HRPB இதயவியல் குழுவிற்கு பிரதமர் வாழ்த்து
April 1, 2026, 5:05 pm
சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல: எஸ்.பி.எம் தேர்வில் 11 'ஏ' க்களைப் பெற்ற சதுரங்க வீரர்
April 1, 2026, 4:48 pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மறைவு: பெந்தோங் காவல்துறை விசாரணை
April 1, 2026, 4:45 pm
