செய்திகள் மலேசியா
கம்போங் ஜாவா தமிழ்ப்பள்ளி வகுப்பறையின் கூரை சரிந்து விழுந்தது மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்குவது: சசிதரன் கேள்வி
கிள்ளான்:
கம்போங் ஜாவா பத்து 4 தமிழ்ப்பள்ளி வகுப்பறையின் கூரை சரிந்து விழுந்தது.
சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்குவது என்று சிலாங்கூர் மாநில மஇகா தலைமைச் செயலாளர் எம். சசிதரன் கேள்வி எழுப்பினார்.
சிலாங்கூர் மாநில மஇகாவின் கல்விக் குழு தலைவர் பாண்டியன், கோத்தா ராஜா தொகுதி உதவித் தலைவர் சுப்பிரமணியம், கோத்தாராஜா கிளைத் தலைவர் ராஜ்சிங் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்றிருந்தேன்.
பள்ளியின் தலைமையாசிரியரை சந்தித்த்ததுடன் கூரை சரிந்து விழுந்த வகுப்பறையையும் பார்வையிட்டேன்.
சம்பவம் நிகழ்ந்த தினம் விடுமுறை என்பதால் வகுப்பறையில் மாணவர்கள் இல்லை.
ஒருவேளை பள்ளி நேரமாக இருந்திருந்தால் மாணவர்களின் நிலை மோசமாகி இருக்கும்.
அதேவேளையில் இப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்க போவது தான் அனைவரின் கேள்வியாக்கும்.
ஆக இச் சம்பவத்திற்கு கல்வியமைச்சு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் அனைத்து தமிழ்ப்பள்ளிகளின் நிலையை ஆராய பொதுப் பணித்துறைக்கு அது உத்தரவிட வேண்டும் என்று சசிதரன் வலியுறுத்தினார்.
இதனையே இப் பள்ளி மாணவர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மற்ற வகுப்பறைகளை ஆய்வு செய்ய ஒரு குத்தகையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் நம் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிப்போம்.
அவர்களின் கற்றல் சூழல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 2:25 pm
ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 2:16 pm
மஇகாவின் அரசியல் எதிர்காலத்தை மத்திய செயலவையே தீர்மானிக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 12:30 pm
இஸ்லாத்தை நிர்வாகத்தின் மையமாக மீட்டெடுக்க பாஸ் விரும்புகிறது: டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி
January 1, 2026, 12:07 pm
இன்று முதல், RM5 மில்லியன் வரை வருவாய் உள்ள வணிகங்கள் மின்னணு விலைப்பட்டியலை செயல்படுத்த வேண்டும்
January 1, 2026, 10:57 am
பத்துமலை 140 அடி முருகன் சிலையின் 20ஆம் ஆண்டு பூர்த்தி விழாவுடன் பன்னீர் அபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது
January 1, 2026, 1:37 am
மலேசியாவை ஒரு நாகரிக நாடாக மாற்றும் உறுதியுடன் மக்கள் ஒன்றுபட வேண்டும்: பிரதமர்
January 1, 2026, 1:36 am
