செய்திகள் மலேசியா
100 மில்லியன் மரங்கள்: மலேசியா சாதனை
கோலாலம்பூர்:
வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் மரங்கள் நடும் இலக்கை மலேசியா முன்கூட்டியே எட்டிவிட்டது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் 100 மில்லியனாவது மரத்தை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தாமான் ஹெர்பாவில் நட்டார்.
அப்போது பிரதமரின் மனைவியும் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் உடனிருந்தார்.
மலேசியாவின் தேசிய மெர்பாவ் மரத்தின் கன்றை அன்வார் நட்டார்.
ஐந்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் 100 மில்லியன் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மலேசியா கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கியது. 2025ஆம் ஆண்டுக்குள் அந்த இலக்கை அடைய வேண்டும்.
ஆனால், இவ்வாண்டிலேயே அந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது.
2021 ஜனவரி 5ஆம் தேதி மரக்கன்று நடும் பிரசார இயக்கம் தொடங்கியபோது மலேசிய கூட்டரசின் வனத்துறை, சரவா வனத்துறை, சாபா வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அதற்கு ஒத்துழைப்பு அளித்தன.
பிரசாரத் திட்ட காலத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நாடு முழுவதும் நடப்பட்டன.
18 மில்லியன் ஹெக்டர் வனப்பகுதியை மலேசியா அடைந்து சாதித்துள்ளதாக இயற்கை வளம், சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்து உள்ளது. இது நாட்டின் நிலப்பகுதியில் 54.58 விழுக்காடு ஆகும்.
மரக்கன்று நடும் திட்டம் உயிரியல் பன்முகத்தன்மையை மீட்டெடுப்பதோடு பருவநிலை மாற்ற தாக்கங்களை தணிக்கவும் உதவுவதாக அமைச்சு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 27, 2025, 11:25 am
1 எம்டிபி தண்டனைக்கு எதிராக நஜிப் திங்கட்கிழமை மேல்முறையீடு செய்வார்: வழக்கறிஞர் ஷாபி
December 27, 2025, 10:09 am
பழிவாங்குவதற்காக அல்ல, எனது கொள்கையளவில் தொடர்வேன்: நஜிப்
December 27, 2025, 10:05 am
1 எம்டிபி வழக்கில் நஜிப்பிற்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை: 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதம்
December 26, 2025, 1:59 pm
2023 முதல் 620,000 பேருக்கான வேலை வாய்ப்புகளை MYFutureJobs பூர்த்தி செய்துள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
December 26, 2025, 1:42 pm
சவூதி மன்னரிடமிருந்து நன்கொடை பெற்றதை நஜிப் உறுதிப்படுத்தவில்லை: நீதிபதி
December 26, 2025, 1:25 pm
1 எம்டிபி வழக்கு; ஜோ லோ நஜிப்பின் பினாமி என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன: உயர் நீதிமன்றம்
December 26, 2025, 12:00 pm
1 எம்டிபி வழக்கு: அரபு நன்கொடை கடிதம் போலியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது
December 26, 2025, 11:24 am
1 எம்டிபி வழக்கு: நஜிப்பிற்கு ஆதரவாக பிள்ளைகள், அரசியல் தலைவர்கள், ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் கூடினர்
December 26, 2025, 10:27 am
