![image](https://imgs.nambikkai.com.my/WhatsApp-Image-2024-12-11-at-12-24-56-PM.jpeg)
செய்திகள் மலேசியா
100 மில்லியன் மரங்கள்: மலேசியா சாதனை
கோலாலம்பூர்:
வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் மரங்கள் நடும் இலக்கை மலேசியா முன்கூட்டியே எட்டிவிட்டது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் 100 மில்லியனாவது மரத்தை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தாமான் ஹெர்பாவில் நட்டார்.
அப்போது பிரதமரின் மனைவியும் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் உடனிருந்தார்.
மலேசியாவின் தேசிய மெர்பாவ் மரத்தின் கன்றை அன்வார் நட்டார்.
ஐந்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் 100 மில்லியன் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மலேசியா கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கியது. 2025ஆம் ஆண்டுக்குள் அந்த இலக்கை அடைய வேண்டும்.
ஆனால், இவ்வாண்டிலேயே அந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது.
2021 ஜனவரி 5ஆம் தேதி மரக்கன்று நடும் பிரசார இயக்கம் தொடங்கியபோது மலேசிய கூட்டரசின் வனத்துறை, சரவா வனத்துறை, சாபா வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அதற்கு ஒத்துழைப்பு அளித்தன.
பிரசாரத் திட்ட காலத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நாடு முழுவதும் நடப்பட்டன.
18 மில்லியன் ஹெக்டர் வனப்பகுதியை மலேசியா அடைந்து சாதித்துள்ளதாக இயற்கை வளம், சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்து உள்ளது. இது நாட்டின் நிலப்பகுதியில் 54.58 விழுக்காடு ஆகும்.
மரக்கன்று நடும் திட்டம் உயிரியல் பன்முகத்தன்மையை மீட்டெடுப்பதோடு பருவநிலை மாற்ற தாக்கங்களை தணிக்கவும் உதவுவதாக அமைச்சு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 10:55 pm
முதலீட்டில் சீனாவைவிட அமெரிக்கா இன்னும் உயர்ந்த நிலையில் உள்ளது: அன்வார்
January 17, 2025, 10:46 pm
மாறுபட்ட வேலை நேரம் அமைப்பு சுகாதாரப் பணியாளர்களின் பணிச் சுமையை குறைக்கும்: சூல்கிப்ளி
January 17, 2025, 6:16 pm
சரவாக்கில் நிகழ்ந்த பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையை போலிஸ் முடித்துள்ளது: ஐஜிபி ரஸாருடின் ஹுசைன்
January 17, 2025, 5:32 pm
கிந்தா இந்தியர் சங்கத்தின் பொங்கல் விழாவில் ஐந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பு
January 17, 2025, 4:18 pm
ஊழல் எதிர்ப்பு பேரணி தடையின்றி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ஹனிபா
January 17, 2025, 4:16 pm
இந்திய தொழில் முனைவர்களுக்கான தெக்குன் நிதியயை அமைச்சு முழுமையாக கண்காணிக்கும்: டத்தோஶ்ரீ ரமணன்
January 17, 2025, 4:14 pm
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 448 பிள்ளைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்: நான்சி சுக்ரி
January 17, 2025, 4:14 pm
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் மீறியதில்லை: நஜிப்
January 17, 2025, 2:31 pm