செய்திகள் மலேசியா
2030 முதல் மலேசியாவில் ஆண்டுதோறும் 66 ஆயிரம் புதிய புற்றுநோயாளிகள் உருவாகும் அபாயம்: கைரி தகவல்
கோலாலம்பூர்:
மலேசியாவில் எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு புற்றுநோய்களால் ஆண்டுதோறும் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 66 ஆயிரமாக உயரும் என அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய புற்றுநோய் பதிவேட்டு அறிக்கையில், நுரையீரல் மற்றும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 11% மற்றும் 12.8% பேர் மட்டுமே ஐந்து ஆண்டு காலம் வரை உயிர்வாழும் விகிதத்தை கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் குறிப்பிட்டுள்ளார்.
"பெரும்பாலானோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது அந்நோயின் மூன்று அல்லது நான்காம் கட்டத்தில்தான் தெரிய வருகிறது. இவ்வாறு நோய் கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை 58.7%இல் இருந்து 63.7%ஆக அதிகரித்துள்ளது. 2012 முதல் 2016ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை உயர்வு ஏற்பட்டுள்ளது," என்று அமைச்சர் கைரி தெரிவித்துள்ளார்.
மலேசியர்கள் மத்தியில் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், மலேசியர்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் இது இரண்டாம் இடத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 2:25 pm
ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 2:16 pm
மஇகாவின் அரசியல் எதிர்காலத்தை மத்திய செயலவையே தீர்மானிக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 12:30 pm
இஸ்லாத்தை நிர்வாகத்தின் மையமாக மீட்டெடுக்க பாஸ் விரும்புகிறது: டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி
January 1, 2026, 12:07 pm
இன்று முதல், RM5 மில்லியன் வரை வருவாய் உள்ள வணிகங்கள் மின்னணு விலைப்பட்டியலை செயல்படுத்த வேண்டும்
January 1, 2026, 10:57 am
பத்துமலை 140 அடி முருகன் சிலையின் 20ஆம் ஆண்டு பூர்த்தி விழாவுடன் பன்னீர் அபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது
January 1, 2026, 1:37 am
மலேசியாவை ஒரு நாகரிக நாடாக மாற்றும் உறுதியுடன் மக்கள் ஒன்றுபட வேண்டும்: பிரதமர்
January 1, 2026, 1:36 am
