செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் தரையிறங்க முடியாமல் மலேசியா, துபாய் விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன
சென்னை:
மலேசியா, துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 2 சர்வதேச விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பி சென்றன.
நிர்வாக காரணங்களால் விமானங்கள் பெங்களூரு திரும்பிச் சென்றதாக அறிவிக்கப்பட்டது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று காலை 7.25 மணிக்கு 152 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்தது.
ஆனால், அந்த விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதிக்காமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதுபோல், துபாயிலிருந்து 264 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 8.15 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்தது.
அந்த விமானத்தையும் சென்னையில் தரையிறங்க அனுமதிக்காமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பினர்.
அதேபோல் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு காலை 8.05 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் ஏசியா விமானம், 16 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்படுவதால், இந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகளுக்கு, தாமதம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் முழுவதும் பெஞ்சல் புயல் கனமழை காரணமாக, விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 4:17 pm
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியில்லை: விஜய் அறிவிப்பு
January 17, 2025, 11:55 am
காணும் பொங்கலில் சுற்றுலா தலங்களில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள்
January 16, 2025, 9:51 pm
தமிழ் பாரம்பரிய மாதம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்
January 15, 2025, 5:57 pm
தமிழறிஞர்களுக்கு அரசின் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்
January 15, 2025, 12:53 pm
கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியத்தை ரூ.5000 ஆக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
January 15, 2025, 12:17 pm
1,000 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு அனல் பறக்க நடந்து வருகிறது
January 14, 2025, 7:15 pm
களைகட்டியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
January 14, 2025, 1:01 am
தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்: த வெ கழகத் தலைவர் விஜய்
January 12, 2025, 11:08 pm