
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் தரையிறங்க முடியாமல் மலேசியா, துபாய் விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன
சென்னை:
மலேசியா, துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 2 சர்வதேச விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பி சென்றன.
நிர்வாக காரணங்களால் விமானங்கள் பெங்களூரு திரும்பிச் சென்றதாக அறிவிக்கப்பட்டது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று காலை 7.25 மணிக்கு 152 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்தது.
ஆனால், அந்த விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதிக்காமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதுபோல், துபாயிலிருந்து 264 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 8.15 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்தது.
அந்த விமானத்தையும் சென்னையில் தரையிறங்க அனுமதிக்காமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பினர்.
அதேபோல் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு காலை 8.05 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் ஏசியா விமானம், 16 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்படுவதால், இந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகளுக்கு, தாமதம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் முழுவதும் பெஞ்சல் புயல் கனமழை காரணமாக, விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 5:53 pm
தூத்துக்குடியில் மிதவை கப்பலின் டேங்கை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
September 17, 2025, 4:04 pm
பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
September 15, 2025, 12:26 pm
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm