செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் தரையிறங்க முடியாமல் மலேசியா, துபாய் விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன
சென்னை:
மலேசியா, துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 2 சர்வதேச விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பி சென்றன.
நிர்வாக காரணங்களால் விமானங்கள் பெங்களூரு திரும்பிச் சென்றதாக அறிவிக்கப்பட்டது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று காலை 7.25 மணிக்கு 152 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்தது.
ஆனால், அந்த விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதிக்காமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதுபோல், துபாயிலிருந்து 264 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 8.15 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்தது.
அந்த விமானத்தையும் சென்னையில் தரையிறங்க அனுமதிக்காமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பினர்.
அதேபோல் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு காலை 8.05 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் ஏசியா விமானம், 16 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்படுவதால், இந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகளுக்கு, தாமதம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் முழுவதும் பெஞ்சல் புயல் கனமழை காரணமாக, விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 5:04 pm
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவர் கைது
November 2, 2025, 5:26 pm
இன்று கல்லறை திருநாள், நாளை முகூர்த்தநாள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
November 2, 2025, 11:19 am
அதிமுக தலைமைக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம்
October 31, 2025, 11:51 am
‘செந்தமிழர் சீமான்’ என்று வாழ்த்தி முழக்கமிட்ட வைகோ: தொண்டர்கள் மகிழ்ச்சி
October 29, 2025, 5:59 pm
குப்பை ஊழலில் புதுவை முதல்வருடன் இருப்பவருக்கு தொடர்பு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
October 27, 2025, 10:42 pm
கரூர் சம்பவம்; என்னை மன்னித்துவிடுங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்
October 27, 2025, 12:49 pm
