
செய்திகள் விளையாட்டு
மெஸ்ஸியின் ஜெர்சி அணிந்துவர தடை விதித்த பராகுவே
அசன்சியன்:
உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தின் போது மெஸ்ஸியின் ஜெர்சியை அணிந்து வர உள்நாட்டு மக்களுக்கு பராகுவே தடை விதித்துள்ளது.
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் தென் ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பில் அர்ஜெண்டினாவும் பராகுவே அணியும் இருக்கின்றன.
கடந்த முறை உலகக் கிண்ணத்தை மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா அணி வென்றது.
தற்போது, நடப்பு சாம்பியன் அணியுடன் பராகுவே அணி தனது சொந்த மண்ணில் வரும் வெள்ளிக்கிழமை மோதுகிறது.
இந்நிலையில் இந்தப் போட்டிக்கு பராகுவே அணி தங்களது உள்நாட்டு மக்களுக்கு மெஸ்ஸி அல்லது அர்ஜெண்டினா சம்பந்தப்பட்ட எந்த சீருடையையும் அணிந்து வரக்கூடாதென கூறியுள்ளது.
மெஸ்ஸியின் பார்சிலோனா, இண்டர்மியாமி, அர்ஜெண்டினா போன்ற எந்த வகையிலும் 10 என்ற எண் பதிந்த சீருடையை அணிந்து வரக்கூடாதென பராகுவே திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சொந்த மண்ணில் தேசிய அணிக்கு ஆதரவளிக்க இப்படி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2025, 3:08 pm
இங்கிலாந்து FA கிண்ண இறுதியாட்டம்: கிரிஸ்டல் பேலஸ் 1 - மென்செஸ்டர் சிட்டி 0
May 18, 2025, 3:02 pm
தாய்லாந்து பொதுப் பூப்பந்து போட்டி 2025: பெர்லி தான் - எம். தீனா இணை வாகை சூடினர்
May 17, 2025, 6:57 pm
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இந்த பருவம் இன்னும் முடிவடையவில்லை: ராயன் கிக்ஸ்
May 16, 2025, 3:47 pm
பேராக்கில் மாநில அளவிலான இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்கு கபடி போட்டி
May 16, 2025, 1:14 pm
FORBES 2025: உலகின் பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலில் ரொனால்டோவுக்கு மீண்டும் முதலிடம்
May 16, 2025, 12:56 pm
எஸ்பான்யோல் அணியை வீழ்த்தியது பார்சிலோனா: 28ஆவது லா லீகா கிண்ணத்தை வெற்றிக்கொண்டது
May 16, 2025, 12:52 pm