
செய்திகள் விளையாட்டு
மெஸ்ஸியின் ஜெர்சி அணிந்துவர தடை விதித்த பராகுவே
அசன்சியன்:
உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தின் போது மெஸ்ஸியின் ஜெர்சியை அணிந்து வர உள்நாட்டு மக்களுக்கு பராகுவே தடை விதித்துள்ளது.
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் தென் ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பில் அர்ஜெண்டினாவும் பராகுவே அணியும் இருக்கின்றன.
கடந்த முறை உலகக் கிண்ணத்தை மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா அணி வென்றது.
தற்போது, நடப்பு சாம்பியன் அணியுடன் பராகுவே அணி தனது சொந்த மண்ணில் வரும் வெள்ளிக்கிழமை மோதுகிறது.
இந்நிலையில் இந்தப் போட்டிக்கு பராகுவே அணி தங்களது உள்நாட்டு மக்களுக்கு மெஸ்ஸி அல்லது அர்ஜெண்டினா சம்பந்தப்பட்ட எந்த சீருடையையும் அணிந்து வரக்கூடாதென கூறியுள்ளது.
மெஸ்ஸியின் பார்சிலோனா, இண்டர்மியாமி, அர்ஜெண்டினா போன்ற எந்த வகையிலும் 10 என்ற எண் பதிந்த சீருடையை அணிந்து வரக்கூடாதென பராகுவே திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சொந்த மண்ணில் தேசிய அணிக்கு ஆதரவளிக்க இப்படி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 11:04 am
லண்டன் டையமண்ட் லீக்: 100 மீ. ஓட்டத்தில் லைல்ஸ் மீண்டும் களத்தில் – தேபோகோவுடன் மோதல்
July 18, 2025, 9:49 am
லெவன்டோவ்ஸ்கியை மீண்டும் அணியின் இணைக்க போலந்து முயற்சி
July 18, 2025, 9:48 am
டியோகோ ஜோட்டாவை நினைவுகூரும் இலவச துண்டுப் பிரசுரங்கள் இணையத்தில் கூடுதல் விலையில் விற்பனை
July 18, 2025, 9:18 am
ஒலிம்பிக் போட்டியின் புது வடிவ பதக்கங்கள் வெளியிடப்பட்டன
July 17, 2025, 4:09 pm
மெர்டேகா கோப்பை மீண்டும் நடைபெற வாய்ப்பு
July 17, 2025, 3:29 pm
ஜப்பான் பொது பூப்பந்து போட்டி: தேசிய கலப்பு இரட்டையர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்
July 17, 2025, 10:58 am
கனடிய பொது டென்னில் போட்டியிலிருந்து அரினா சபாலென்கா விலகல்
July 16, 2025, 3:04 pm
மலேசியா கால்பந்து அணி மீண்டு(ம்) எழும் நஃபுசி நைன் நம்பிக்கை
July 16, 2025, 9:22 am