செய்திகள் உலகம்
ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டார்: ஈராக் அறிவிப்பு
இஸ்தான்புல்:
ஐஎஸ் உயர்மட்டத் தலைவர் கொல்லப்பட்டதாக ஈராக் பிரதமர் முஹம்மது ஷியா அல் சூடானி அறிவித்துள்ளார்.
இதனை அனடோலு (Anadolu news) ஏஜென்சி தெரிவித்துள்ளது.
வடகிழக்கு ஈராக்கின் ஹம்ரின் மலைப் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அக் குழுவின் ஈராக் தலைவராக அறிவிக்கப்பட்டவர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.
ஈராக்கில் பயங்கரவாதிகளுக்கு இடமில்லை, நாங்கள் அவர்களை அவர்களின் மறைவிடங்களுக்கு சென்று வேட்டையாடுவோம்.
ஈராக் நிலம் அவர்களை அழிக்கும் வரை அவர்களை அழிப்போம் என்று அல்-சூடானி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் முதல் ஐஎஸ் பயங்கரவாத குழு மொசூல், சலாடின், அன்பர், தியாலா, கிர்குக் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2024, 6:04 pm
பிரிக்ஸ் கரென்சி: டாலரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த தயாராகிறது
October 24, 2024, 2:24 pm
இலங்கையில் வைத்து இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதல் திட்டம்: இருவர் கைது
October 23, 2024, 11:14 am
அமெரிக்கா விரைவில் திவாலாகும்: எலான் மஸ்க் எச்சரிக்கை
October 22, 2024, 9:10 pm
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த இந்திய கல்வி அமைச்சர்
October 22, 2024, 8:31 pm
இலங்கையில் புதிய வர்ணங்களில் கடவுச் சீட்டு
October 22, 2024, 3:00 pm