செய்திகள் இந்தியா
தந்தையை இழந்த சோகத்தை மீண்டும் உணர்கிறேன்: வயநாட்டில் ராகுல்
வயநாடு:
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ராகுல், தனது தந்தையை இழந்தபோது ஏற்பட்ட சோகத்தை மீண்டும் உணர்கிறேன் என்று உணர்ச்சி தழுவ கூறினார்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐதாண்டியுள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியை ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டனர். நிவாரண முகாம்களில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேப்பாடியில் 2 நிவாரண முகாம்களுக்கு சென்று, அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நிச்சயமாக இது ஒரு தேசிய பேரழிவு. மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், வீடுகளையும் இழந்திருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் அவர்களிடம் பேசுவதே மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. எனது தந்தையை இழந்தபோது ஏற்பட்ட சோகத்தை மீண்டும் உணர்கிறேன் என்றார்.
பிரியங்கா காந்தி கூறுகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், எங்களால் முடிந்த ஆதரவையும், ஆறுதலையும் வழங்குவோம் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
பண மோசடி வழக்கு: அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்
November 20, 2025, 10:27 pm
பிஹார் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்ற நிதிஷ் குமார்: அமைச்சர்கள் யார் யார்?
November 19, 2025, 4:47 pm
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது: அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
November 19, 2025, 2:07 pm
இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை
November 18, 2025, 5:58 pm
மனைவியைப் பணயமாக வைத்து சூதாடிய கணவன்: தோற்றதால் எட்டு பேருக்கு பங்கு வைத்த கணவன் கைது
November 17, 2025, 3:54 pm
உம்ராவிற்குச் சென்ற 42 இந்தியர்கள் சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்
November 16, 2025, 2:40 pm
100 தோப்புக்கரணம் போட்டதால் 6 வகுப்பு மாணவி மரணம்
November 16, 2025, 10:54 am
114 வயதில் காலமான மரங்களின் தாய் என்றழைக்கப்பட்ட திம்மக்கா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
November 14, 2025, 11:31 am
