
செய்திகள் தமிழ் தொடர்புகள்
இலங்கையில் உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு: டத்தோஸ்ரீ சரவணன் சிறப்புரை
மட்டக்களப்பு:
உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு அடுத்த இரண்டு நாட்களுக்கு இலங்கை மட்டக்களப்பில் விமரிசையாக நடைபெறவுள்ளது.
மஇகா தேசியத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இம் மாநாட்டில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இலங்கை கிழக்கு மாகாண பண்பாட்டலூவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இம் மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
திருவள்ளுவர் சிலை திறப்பு, உலகத் தமிழ் ஆய்வறிஞர்கள் பங்கு கொள்ளும் மாநாடு, தமிழ் கலைஞர்களின் ஊர்வலம், ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் என இம்மாநாடு சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.
உலக நாடுகளில் இருந்து திரளான பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ளனர்.
டத்தோஸ்ரீ சரவணன் இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று இலங்கை புறப்பட்டு சென்றார்.
இம் மாநாட்டில் அவர் முக்கிய பிரமுகராக கலந்து கொள்வதுடன் சிறப்புரையும் ஆற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 4:04 pm
பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
September 15, 2025, 12:26 pm
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm
செப்.13 முதல் டிச.20 வரை விஜய் சுற்றுப்பயணம்: அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக மனு
September 9, 2025, 12:07 pm