நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பிரபல தனியார் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மரணம்

சென்னை: 

பிரபல தனியார் தமிழ்ச் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த சௌந்தர்யா அமுதமொழி புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

இவர் கடந்த 6 மாத காலமாக இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சைக்காக தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்ட நிலையில் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 5.51 லட்சமும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் 5 லட்சமும் நிதியுதவி அளிக்கப்பட்டது.

நீண்டகாலமாக சிகிச்சையில் இருந்த சௌந்தர்யா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். தன்னுடைய தெளிவான உச்சரிப்பு மற்றும் தோற்றம் ஆகியவற்றால் தனித்துவம் பெற்றிருந்தார்.சௌந்தர்யாவின் மறைவு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

-தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset