நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

விமானத்தில் கோளாறு: 2 மணி நேரம் திருச்சி வான்வெளியில் பறந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது

திருச்சி:

விமானத்தில் கோளாறு ஏற்பட்டு திருச்சி வானில் வட்டமடித்து கொண்டிருக்கும் விமானம் 8.15 மணிக்கு விமானம் தரையிறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று மாலை 5:40 மணிக்கு சுமார் 144 பயணிகளுடன் ஷார்ஜா நோக்கி புறப்பட்ட விமானம் ஹைட்ராலிக் பிரச்சினையால் டயர் உள்ளிழுக்க முடியாமல் மீண்டும் திருச்சி விமான நிலையம் திரும்பினாலும் தரையிறங்க முடியாமல் வானிலேயே சுற்றி வந்தது.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் சுற்றி கொண்டே இருந்தது. இந்த விமானத்தில் சுமார் 140-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

விமானத்தை பாதுகாப்புடன் இறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், விமான தொழில்நுட்ப குழுவினர் ஆகியோர் செய்தனர்.

இந்நிலையில் விமான நிலைய அலுவலர்கள் 8.30 மணி அளவில் விமானத்தின் முன்பக்கத்தை உரசியபடி தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில் பத்திரமாக விமானத்தை திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset