செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையைச்சுற்றி இன்று மாலையிலும் இரவிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது: வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
சென்னை:
சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று (ஜூலை 25) மாலையிலும் இரவிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகின்றது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அருகிலுள்ள மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவும்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்புள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும். ஹாசன், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அவலாஞ்சி, மேல் பவானி பகுதிகளிலும் கனமழைக்கான வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2024, 5:44 pm
தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை அக்.21-இல் ரேஷனில் வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
October 15, 2024, 4:06 pm
சென்னையில் கனமழை: 5 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன
October 13, 2024, 5:00 pm
கொட்டி தீர்த்த மழையால் நிலைகுத்தியது மதுரை
October 13, 2024, 1:47 pm
ஆயுத பூஜை, விஜயதசமி தொடர்விடுமுறையில் விதிகளை மீறி இயங்கிய பேருந்துகள் பறிமுதல்
October 12, 2024, 7:08 am
சென்னை அருகே பயங்கர ரயில் விபத்து
October 11, 2024, 11:22 pm
விமானத்தில் கோளாறு: 2 மணி நேரம் திருச்சி வான்வெளியில் பறந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது
October 11, 2024, 12:52 pm