செய்திகள் தமிழ் தொடர்புகள்
மலேசியப் பயணி திருச்சி விமான நிலையத்தில் மயங்கி விழுந்து மரணம்
திருச்சி:
மலேசியாவிலிருந்து வந்த பயணி திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம் துறையூா் பகுதியைச் சோ்ந்தவா் வி. முனீஸ்வரன் (58).
மலேசிய குடியுரிமை பெற்றுள்ள இவா் குடும்பத்தினருடன் அங்கு வசித்து வந்த நிலையில் சொந்தத் தொழில் செய்து வருகிறாா்.
ஆண்டுக்கு ஒரு முறை மகளின் சிகிச்சைக்காக தாயகம் வந்து திருச்சியில் சிகிச்சை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் சிகிச்சைக்காக தனது மனைவி, மகளுடன் ஏா் ஏசியா விமானத்தில் செவ்வாய்க்கிழமை திருச்சி வந்தாா்.
விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு மற்றும் சுங்கத்துறை சோதனைகளுக்காக காத்திருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளாா்.
விமான நிலைய பாதுகாப்பு படையினரின் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2024, 5:44 pm
தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை அக்.21-இல் ரேஷனில் வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
October 15, 2024, 4:06 pm
சென்னையில் கனமழை: 5 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன
October 13, 2024, 5:00 pm
கொட்டி தீர்த்த மழையால் நிலைகுத்தியது மதுரை
October 13, 2024, 1:47 pm
ஆயுத பூஜை, விஜயதசமி தொடர்விடுமுறையில் விதிகளை மீறி இயங்கிய பேருந்துகள் பறிமுதல்
October 12, 2024, 7:08 am
சென்னை அருகே பயங்கர ரயில் விபத்து
October 11, 2024, 11:22 pm
விமானத்தில் கோளாறு: 2 மணி நேரம் திருச்சி வான்வெளியில் பறந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது
October 11, 2024, 12:52 pm