செய்திகள் மலேசியா
9 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன: சுகாதார அமைச்சர்
கோலாலம்பூர்:
9 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன என்று சுகாதார அமைச்சர் டிஜுல்கிஃப்லி அஹமத் தெரிவித்தார்.
தடுப்பூசிகளின் சேமிப்பு மற்றும் தளவாடச் செலவுகளுக்காக 185 மில்லியன் நிதி இழப்பீடு ஏற்பட்டிருப்பதையும் சுகாதார அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்ட தடுப்பு திட்டத்திற்கு அரசு 84.5 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளன.
காலாவதியான கோவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் இழப்பீட்டுத் தொகையையும் குறித்து ஜலாலுடின் எழுப்பியக் கேள்விக்குச் சுகாதார அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
தடுப்பூசி வாங்கப்பட்டபோது கொள்முதல் வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லாததால், இழப்பு தொடர்பான எந்தவொரு தரப்பினரையும் சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டவில்லை என்று ஜுல்கிப்ஃலி கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 10:45 pm
எரிபொருள், மின்சார விலைகள் குறித்து போலிச் செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: பிரதமர்
April 1, 2026, 8:48 pm
ஒரு லிட்டர் டீசல் விலை 6.02 ரிங்கிட்: இதுவே வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையாகும்
April 1, 2026, 8:46 pm
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் திருவள்ளுவர் சிலை: துணையமைச்சர் 7,000 ரிங்கிட் நிதி வழங்கினார்
April 1, 2026, 5:30 pm
HRPB இதயவியல் குழுவிற்கு பிரதமர் வாழ்த்து
April 1, 2026, 5:05 pm
சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல: எஸ்.பி.எம் தேர்வில் 11 'ஏ' க்களைப் பெற்ற சதுரங்க வீரர்
April 1, 2026, 4:48 pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மறைவு: பெந்தோங் காவல்துறை விசாரணை
April 1, 2026, 4:45 pm
