செய்திகள் மலேசியா
9 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன: சுகாதார அமைச்சர்
கோலாலம்பூர்:
9 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன என்று சுகாதார அமைச்சர் டிஜுல்கிஃப்லி அஹமத் தெரிவித்தார்.
தடுப்பூசிகளின் சேமிப்பு மற்றும் தளவாடச் செலவுகளுக்காக 185 மில்லியன் நிதி இழப்பீடு ஏற்பட்டிருப்பதையும் சுகாதார அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்ட தடுப்பு திட்டத்திற்கு அரசு 84.5 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளன.
காலாவதியான கோவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் இழப்பீட்டுத் தொகையையும் குறித்து ஜலாலுடின் எழுப்பியக் கேள்விக்குச் சுகாதார அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
தடுப்பூசி வாங்கப்பட்டபோது கொள்முதல் வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லாததால், இழப்பு தொடர்பான எந்தவொரு தரப்பினரையும் சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டவில்லை என்று ஜுல்கிப்ஃலி கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 4:17 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் வவாசான் கட்சி போட்டியிடாது: ஹம்சா
June 25, 2026, 2:45 pm
சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசிய டாக்சிக்கு $15 கட்டணம் உயர்த்தப்படுகிறது
June 25, 2026, 2:10 pm
பள்ளத்தில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: லஹாட் டத்து மக்களிடையே பரபரப்பு
June 25, 2026, 12:37 pm
