செய்திகள் இந்தியா
திரிபுரா மாநிலத்தில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு HIV பாதிப்பு
அகர்தலா:
திரிபுரா மாநிலத்தில் எச்ஐவி தொற்று நோய்க்கு 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
எய்ட்ஸ் என்கிற எச்ஐவி தொற்றைக் குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இதைக் கட்டுப்படுத்த சில மருந்துகள் கண்டறிந்துள்ளனர். இந்த கொடிய நோய்ப் பாதிப்பால் பலரும் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகின்றது. ஆப்பிரிக்க போன்ற நாடுகளில் எச்ஐவி பாதிப்பின் தீவிரம் அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு புதிய வடிவம் எடுத்துள்ளது.
அந்தவகையில், திரிபுராவில் கடந்த 2007 முதல் 2024 வரையிலான 17 வருட புள்ளி விவரங்களின்படி, சுமார் 828 மாணவர்கள் எச்ஐவி தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக திரிபுராவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அரசு வெளியிட்ட எக்ஸ் பதிவில், திரிபுராவில் 828 மாணவர்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கும் திரிபுராவில் இருந்து மாணவர்கள் படிக்கச் சென்றிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைக் கண்டறிந்து மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
பண மோசடி வழக்கு: அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்
November 20, 2025, 10:27 pm
பிஹார் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்ற நிதிஷ் குமார்: அமைச்சர்கள் யார் யார்?
November 19, 2025, 4:47 pm
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது: அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
November 19, 2025, 2:07 pm
இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை
November 18, 2025, 5:58 pm
