
செய்திகள் மலேசியா
செந்தூல் ஸ்ரீ நாகம்மன் ஆலய விவகாரத்தில் மூன்றாம் தரப்பினருடன் பேச்சுவார்த்தையா? ஆலய செயலாளர் போலிசில் புகார்
கோலாலம்பூர்:
செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவில் விவகாரத்தில் மூன்றாம் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மேம்பாட்டு நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும்.இதனை வலியுறுத்தி ஆலய செயலாளர் ஹரிஹரன் போலிசில் புகார் செய்துள்ளார்.
இந்த ஆலய நிலப் பிரச்சினை இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும் வேளையில் கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் மூன்றாம் தரப்புடன் ஒய்டிஎல் மேம்பாட்டு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
நாகம்மன் ஆலய நிர்வாகம் முறையாக தேசிய பதிவு இலாகாவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது .
ஒய்டிஎல் மேம்பாட்டு நிறுவனம் எங்களிடம் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
தவிர திடீரென முளைத்த மூன்றாம் தரப்புடன் அல்ல என்று கோவில் செயலாளர் ஹரிஹரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று காலையில் செந்நூல் போலிஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏ.கே. இராமலிங்கம், பத்து தொகுதி தலைவர் பாலகுமாரன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2025, 4:22 pm
கோயில் இடமாற்ற விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும்: கோபிந்த் சிங்
March 20, 2025, 4:21 pm
லாபமற்ற நிறுவனங்களின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்
March 20, 2025, 4:00 pm
இனங்களுக்கு இடையிலான மோதல்களும் சண்டைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
March 20, 2025, 3:40 pm
அனுபவம், தகுதிகளின் அடிப்படையில் பினாங்கின் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார்: சாவ் கோன் இயோ
March 20, 2025, 1:31 pm
மடானி அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு ஆலயமும் உடைபடாது: டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
March 20, 2025, 1:10 pm
புக்கிட் பிந்தாங்கில் பேரரசர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார்
March 20, 2025, 12:03 pm
ஜொகூரில் வெள்ளம்: 10 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன
March 20, 2025, 12:02 pm