![image](https://imgs.nambikkai.com.my/attack-219a3.jpg)
செய்திகள் உலகம்
நைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல்: சுமார் 18 பேர் உயிரிழப்பு
மைடுகுரி:
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நைஜீரியாவில் தீவிரவாதக் குழுவின் பெண்கள் பிரிவு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த நாட்டின் வடக்கு பகுதியில் திருமண விழா, மருத்துவமனை மற்றும் துக்க வீடு என பல்வேறு இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரமான குவோசாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழா கொண்டாட்டத்தில் முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் பொது மருத்துவமனையில் தாக்குதல் நடந்துள்ளது.
மூன்றாவது சம்பவம் துக்க வீடு ஒன்றில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணி பெண்களும் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுவரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2024, 6:31 pm
பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தொடங்கியது
July 4, 2024, 4:47 pm
அதிகரிக்கும் விலைவாசியைச் சமாளிக்க 1.5 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு ரொக்க வழங்கீடு
July 4, 2024, 9:36 am
டெஸ்லா கார் திரையில் பிழை; சுட்டிக்காட்டிய சீனச் சிறுமி: பதிலளித்த எலான் மஸ்க்
July 2, 2024, 11:10 am
ஏர் யூரோபா விமானத்தில் காற்றுக் கொந்தளிப்பு; 40-க்கும் அதிகமான பயணிகள் காயம்
July 1, 2024, 2:16 pm
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறைவு
July 1, 2024, 1:21 pm
ஆஸ்திரேலியா அனைத்துலக மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியுள்ளது
June 30, 2024, 11:14 pm
நேபாளத்தில் நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு
June 29, 2024, 4:07 pm