செய்திகள் இந்தியா
அரசியலில் இருந்து விலகினார் வி.கே.பாண்டியன்
புது டெல்லி:
ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஒடிஸா பேரவைத் தேர்தலில், பாஜக 78 இடங்களில் முதல் முறையாக வென்றது. இதனால் 24 ஆண்டுகளாக தொடர்ந்து பிஜு ஜனதா தளம் ஆட்சியை இழந்தது.
தேர்தல் பிரசாரத்தில் ஒடிஸாவை தமிழர் ஆள நினைப்பதா என்று பாஜக கேள்வி எழுப்பியது. மேலும் புரி ஜெந்நாதர் கோயில் சாவி தொலைந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் பாண்டியனை நேரடியாகத் தொடர்புபடுத்தி பேசினார்.
இது தமிழர்களை திருடர்கள் என்று பாஜக கூறுவதாக திமுக விமர்சித்தது.
இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பாண்டியன் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்து வந்தது.
இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார்.
பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு எனக்கு எதிரான பிரசாரமும் பங்கு வகித்திருந்தால், அதற்காக அனைத்து தொண்டர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. 24 ஆண்டுகளுக்கு முன் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தபோது என் வசமிருந்த சொத்துகள் மட்டுமே இப்போதும் என்னிடம் உள்ளன என்று பாண்டியன் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்று அரசியலுக்கு வந்த வி.கே.பாண்டியன், ஆறு மாதத்தில் அரசியலிலும் ஓய்வை அறிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
பண மோசடி வழக்கு: அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்
November 20, 2025, 10:27 pm
பிஹார் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்ற நிதிஷ் குமார்: அமைச்சர்கள் யார் யார்?
November 19, 2025, 4:47 pm
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது: அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
November 19, 2025, 2:07 pm
இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை
November 18, 2025, 5:58 pm
