செய்திகள் இந்தியா
அரசியலில் இருந்து விலகினார் வி.கே.பாண்டியன்
புது டெல்லி:
ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஒடிஸா பேரவைத் தேர்தலில், பாஜக 78 இடங்களில் முதல் முறையாக வென்றது. இதனால் 24 ஆண்டுகளாக தொடர்ந்து பிஜு ஜனதா தளம் ஆட்சியை இழந்தது.
தேர்தல் பிரசாரத்தில் ஒடிஸாவை தமிழர் ஆள நினைப்பதா என்று பாஜக கேள்வி எழுப்பியது. மேலும் புரி ஜெந்நாதர் கோயில் சாவி தொலைந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் பாண்டியனை நேரடியாகத் தொடர்புபடுத்தி பேசினார்.
இது தமிழர்களை திருடர்கள் என்று பாஜக கூறுவதாக திமுக விமர்சித்தது.
இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பாண்டியன் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்து வந்தது.
இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார்.
பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு எனக்கு எதிரான பிரசாரமும் பங்கு வகித்திருந்தால், அதற்காக அனைத்து தொண்டர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. 24 ஆண்டுகளுக்கு முன் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தபோது என் வசமிருந்த சொத்துகள் மட்டுமே இப்போதும் என்னிடம் உள்ளன என்று பாண்டியன் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்று அரசியலுக்கு வந்த வி.கே.பாண்டியன், ஆறு மாதத்தில் அரசியலிலும் ஓய்வை அறிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
November 4, 2025, 4:55 pm
