செய்திகள் தமிழ் தொடர்புகள்
திமுகவின் மாவட்டச் செயலாளராக இருந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீக்கம்
சென்னை:
திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை அப்பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது அக்கட்சித் தலைமை.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பில், “திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி கே.எஸ்.மஸ்தான் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக டாக்டர் ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
இதேபோல், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த நா.புகழேந்தி உயிரிழந்த காரணத்தால் கட்சிப் பணிகள் நடந்திட கெளதம்சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 10:38 pm
சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு புதிய திட்டம்: இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்
January 17, 2025, 4:17 pm
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியில்லை: விஜய் அறிவிப்பு
January 17, 2025, 11:55 am
காணும் பொங்கலில் சுற்றுலா தலங்களில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள்
January 16, 2025, 9:51 pm
தமிழ் பாரம்பரிய மாதம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்
January 15, 2025, 5:57 pm
தமிழறிஞர்களுக்கு அரசின் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்
January 15, 2025, 12:53 pm
கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியத்தை ரூ.5000 ஆக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
January 15, 2025, 12:17 pm
1,000 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு அனல் பறக்க நடந்து வருகிறது
January 14, 2025, 7:15 pm
களைகட்டியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
January 14, 2025, 1:01 am