
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் கனமழை: கோலாலம்பூர் உட்பட 35 விமான சேவைகள் பாதிப்பு
சென்னை:
சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் நேற்று மாலை பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை வரை விட்டு விட்டு பெய்தது.
இந்த நிலையில், இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 17 வருகை விமானங்கள், 18 புறப்பாடு விமானங்கள் உட்பட மொத்தம் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
டில்லி, கொல்கத்தா, பெங்களூரு, மதுரை உள்ளிட்ட 17 இடங்களில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.
அதேபோல, அபுதாபி, கோலாலம்பூர், துபாய், சிங்கப்பூர், டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 18 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:15 pm
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
July 14, 2025, 6:56 am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm