
செய்திகள் விளையாட்டு
சிலாங்கூர் இந்தியர் சங்கத்தின் இளையோர் கிண்ணக் கால்பந்து போட்டி: 10 மாவட்ட குழுக்கள் பங்கேற்பு
கோலாலம்பூர்:
சிலாங்கூர் இந்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இளையோர் கிண்ணக் கால்பந்து போட்டி வரும் ஜூன் மாதம் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த பத்து மாவட்ட குழுக்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன.
21 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த போட்டி சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் ஆதரவோடு நடைபெறுகிறது .
மலேசிய கால்பந்து சங்கத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் இந்த போட்டியின் பூர்வாங்க ஆட்டங்கள் லீக் பாணியில் நடைபெறும்.
இரண்டு பிரிவுகளில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் குழுக்கள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
எஸ்ஐஏ கிண்ணத்தை வெல்லும் குழுவுக்கு 5,000 ரிங்கிட், பரிசுகள் வழங்கப்படும்.
இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 3,000 ரிங்கிட்டும் 3,4 ஆவது இடங்களை பிடிக்கும் குழுக்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படுகிறது.
சிலாங்கூர் இந்தியர் சங்கத்தின் துணைத் தலைவர் நடராஜன், செயலாளர் சந்தனராஜூ தலைமையில் இந்த குலுக்கள் நடைபெற்றது.
எப்ஏஎம் துணைத் தலைவர் டத்தோ சிவசுந்தரம், சிலாங்கூர் இந்தியர் சங்கத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 9:25 am
லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ளாதது அதிர்ஷ்டம்: பாவ்லோ மால்தினி
July 10, 2025, 9:24 am
பிபா கிளப் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி - செல்சி மோதல்
July 9, 2025, 9:19 am
அல்வாரோ கரேராஸுடனான ஒப்பந்தத்தை ரியல்மாட்ரிட் நெருங்கிவிட்டது
July 9, 2025, 9:18 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இறுதியாட்டத்தில் செல்சி
July 8, 2025, 9:00 am
லியோனல் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய அல் அஹ்லி கிளப் முயற்சிக்கிறது
July 7, 2025, 3:22 pm
2025 மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டி நடைபெறாது: மலேசியக் காற்பந்து சங்கம் உறுதி
July 7, 2025, 8:57 am
18 வயது வீரரை 40 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் யுனைடெட் வாங்கியது
July 7, 2025, 8:48 am
டியாகோ ஜோட்டாவின் குடும்பத்தாருக்கு துணையாக இருப்பேன்: ரொனால்டோ
July 6, 2025, 8:55 am