
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது
கோவை:
பெண் காவலர்களை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
காவல் துறை அதிகாரிகள், பெண் காவலா்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக யூ-டியூபா் சவுக்கு சங்கா், கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் தங்கியிருந்தபோது கோயம்புத்தூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அப்போது அவா் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி போலீஸாா் தனியாக ஒரு வழக்கை சவுக்கு சங்கா் மீது பதிவு செய்தனா்.
மேலும் ஒரு பெண் பத்திரிகையாளரை அவதூறாகப் பேசியதாக ஒரு வழக்கையும், தமிழா் முன்னேற்றப் படை தலைவி வீரலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கையும் சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் பதிவு செய்தனா்.
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் ஆவணங்களை போலியாகத் தயாரித்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் சவுக்கு சங்கா் மீது மேலும் ஒரு வழக்கை சென்னை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பதிந்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm
அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
June 30, 2025, 7:11 pm