நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி இறுதியாட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி

லண்டன்: 

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு மென்செஸ்டர் சிட்டி அணியினர் முன்னேறியுள்ளனர்.

வெம்பளி அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் செல்சி அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 84ஆவது நிமிடத்தில் பெர்னாண்டோ சில்வா அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset