நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மோடி பேராசிரியர், நாங்கள் கத்துக்குட்டி: ப. சிதம்பரம்

சிவகங்கை:

"முதலமைச்சர்களை கைதுசெய்துவிட்டு தேர்தலை நடத்தலாம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அதில் மோடி பேராசிரியர், நாங்கள் கத்துக்குட்டி" என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருக்கிறார்.

சிவகங்கை அரண்மனை வாசல் அருகே காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவு கேட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், "முதல்வர்களை கைதுசெய்துவிட்டு தேர்தலை நடத்தலாம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. அதில் மோடி பேராசிரியர், நாங்கள் கத்துக்குட்டி.

நாங்கள் ஆட்சி செய்தபோது முதல்வர்களை கைதுசெய்து சிறையில் அடைத்து தேர்தல் நடத்தி இருந்தால், மோடியும் சிறையில் இருந்திருப்பார். ஆனால், காங்கிரஸ் கட்சி அதை செய்யவில்லை.

எங்களுக்கு ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை உண்டு. நாங்கள் சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தவில்லை. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து விலைவாசி உயர்வு, வேலையின்மையை அதிகரித்த பாஜக அரசு நீடிக்கக் கூடாது, அதற்கு காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்" என்றார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset