நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்தில் சொங்க்ரான் திருவிழா: 3 நாட்களில் 116 பேர் மரணம்

பேங்காக்:

தாய்லாந்து சொங்க்ரான் திருவிழாவின் போது மட்டும் கடந்த  3 நாட்களில் 116 பேர் மரணமடைந்துள்ளனர்.

தாய்லாந்தின் சொங்க்ரான் திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

உள்ளூர் மக்களை தவிர்த்து மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் இருந்து மக்கள் இந்த திருவிழாவிற்கான தாய்லாந்து செல்வார்கள்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மட்டும் 411 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் கிட்டத்தட்ட 48 பேர் மரணமடைந்தனர்.

இதன் மூலம் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 968 விபத்துகள் நடந்துள்ளன. இதில் கிட்டத்தட்ட 116 பேர் மரணமடைந்துள்ளனர்.

936 விபத்துகளில் 40.05 சதவீதம் வேகக் கட்டுப்பாடு இல்லாததால் நிகழ்ந்துள்ளது.

27.81 சதவீதம் குடிபோதையாலும் 16.84 சதவீதம் வாகனங்களை முந்தி செல்வதாலும் நிகழ்ந்துள்ளது.

இதில் குறிப்பாக அதிகமான விபத்து மோட்டார் சைக்கிள்களை உட்படுத்தியதாகும் என்று தாய்லாந்து போலீசார் கூறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset