நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும் அவர்களுக்குத் தீங்கு விளைவிப்போம்: நேதன்யாகு ஆவேசம்

டெல் அவிவ்: 

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் எனத் தகவல் வெளியான நிலையில், தங்கள் நாட்டை நோக்கி ஈரான் ஏவுகணை, டிரோன்கள் ஏவியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. 

100-க்கும் அதிகமான டிரோன்கள் ஈரானிலிருந்து ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

ஈரானின் நேரடி தாக்குதலுக்கு பல ஆண்டாக இஸ்ரேல் தயாராகி வருகிறது. தற்காப்பு மற்றும் தாக்குதலுக்குப் பதிலளிக்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறினார். 

இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும்,  அவர்களுக்கு மீண்டும் தீங்கு விளைவிப்போம் என்று அவர் தெரிவித்தார். 

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக நம்மை தற்காத்துக் கொள்ள அதைத் தலைநிமிர்ந்து, உறுதியுடன் செய்வோம் என்றார் அவர். 

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், ஸ்பெயின், நெதர்லாந்து, நார்வே, செக் குடியரசு, பராகுவே, மெக்சிகோ ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset