நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் சரக்குக் கப்பலை சிறைபிடித்தது ஈரான்: கப்பலில் இந்திய மாலுமிகள் 17 பேர் சிக்கி உள்ளனர்

துபாய்:

இந்திய மாலுமிகள் 17 பேருடன்சரக்குக் கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை சிறைபிடித்தது. இஸ்ரேல், ஈரான் இடையே போர் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்தக் கப்பலுக்கு இஸ்ரேலுடன் தொடர்புள்ளதாக கூறி அதை ஈரான் படையினர் சிறைபிடித்தனர்.

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் தொடர்கிறது.

இஸ்ரேலின் பெரும் பணக்காரருக்கு சொந்தமான கப்பலை ஹெலிகாப்டரில் வந்த ஈரான் படையினர், ஓமன் வளைகுடா அருகில் உள்ள ஹார்முஸ் நீரிணையில் சிறைபிடித்தனர்.

அந்தக் கப்பலில் 25 மாலுமிகள் உள்ளனர். அவர்களில் 17 பேர் இந்தியர்கள்.

ஈரான் படையினர் சிறைபிடித்த கப்பலில் உள்ள 17 இந்தியர்களை விரைந்து மீட்க இந்திய அரசு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள தூதரகங்கள் மூலம் பேச்சு நடத்தி வருகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset