செய்திகள் தமிழ் தொடர்புகள்
சியாம் தாய்லாந்து - பர்மா ரயில்பாதை பணியில் உயிரிழந்த தமிழர்களுக்கு ‘நடுகல்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் நிதியுதவி
சென்னை:
இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு தமிழ் மரபுப்படி ‘நடுகல்’ அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ₹10 லட்சம் நிதியுதவி வழங்கினார். இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானிய ராணுவத்திடம் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் மலேசியா, இந்தோனேசியா, பர்மா நாடுகளில் இருந்து கட்டாயப்படுத்தி ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தாய்லாந்து நாட்டினை பர்மா நாட்டுடன் இணைக்கும் ரயில் பாதையின் கட்டுமான பணிகளில் ஏறத்தாழ 1.50 லட்சம் தமிழர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பணியின்போது வேலைச்சுமை, போதிய உணவு கிடைக்காமை, நோய் முதலிய காரணங்களால் ஏறத்தாழ 70 ஆயிரம் தமிழர்கள் இறந்துள்ளனர்.
இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியில் உள்ள தவாவோர்ன் என்ற புத்தர் கோயில் வளாகத்தில் இக்கட்டுமான பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களின் உடல்கள் மொத்தமாக புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அங்கு புதைக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில், ‘நடுகல்’ அமைத்திட தாய்லாந்து நாட்டு தமிழ்ச் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், தாய்லாய்ந்து தமிழ்ச் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, இரண்டாம் உலகப்போரின்போது அங்கு உயிர்நீத்த தமிழர்களுக்கு ‘நடுகல்’ அமைத்திட ₹10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இதை தொடர்ந்து, தாய்லாந்து நாட்டில் இருந்து வந்துள்ள தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ரமேஷ் தர்மராஜன், துணைத்தலைவர் ரமணன், ஒருங்கிணைப்பாளர் சுந்தரகுமார், செய்தி தொடர்பாளர் மகேந்திரன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று நேரில் சந்தித்து, தாய்லாந்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு ‘நடுகல்’ அமைத்திட வழங்கிய நிதியுதவிக்காக நன்றி தெரிவித்தனர்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாத்திட அயலகத் தமிழர் நலத்துறை ஒன்றை உருவாக்கி, உலகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்வதற்காக தாய்லாந்து நாட்டின் சார்பில் நன்றியுடன் பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 7:45 pm
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
April 29, 2024, 11:50 am
தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்வு
April 28, 2024, 1:34 pm
மீண்டும் ஆரம்பமாகிறது இலங்கை நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை
April 28, 2024, 11:59 am
அயன் பட பாணியில் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய குருவி கைது
April 27, 2024, 11:52 am
லுங்கி அணிந்தபடி மூட்டைகளை தூக்கிச் செல்லும் புதுவை முன்னாள் அமைச்சர்: வைரலாகும் காணொலி
April 25, 2024, 6:56 pm
மோடியின் மத வெறுப்பு பிரசார பேச்சுக்கு சீமான் கடும் கண்டனம்
April 23, 2024, 5:20 pm