நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மான்டி கார்லோ டென்னிஸ்: ஹோல்கர் ருனே அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்

மான்டி கார்லோ:

மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-அவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 93-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சுமித் நாகல், 7-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ருனேவை எதிர்கொண்டார்.

நேற்று முன்தினம் 2-வது செட்டுடன் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த ஆட்டம் மறு நாளான நேற்று தொடர்ந்து நடந்தது.

2-ஆவது செட்டை வசப்படுத்தி ஹோல்கருக்கு அதிர்ச்சி அளித்த சுமித் நாகல், கடைசி செட்டை தவற விட்டார்.

2 மணி 11 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஹோல்கர் ருனே 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை போராடி தோற்கடித்தார்.

42 ஆண்டுக்கு பிறகு மான்டி கார்லோ டென்னிசில் ஒற்றையர் பிரிவுக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையோடு நாகல் வெளியேறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset