செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழக அரசியல் கட்சிக்காக ஹவாலா மூலம் ரூ200 கோடி: விமான நிலையத்தில் சிக்கிய மலேசியா ரிட்டர்ன் வினோத்
சென்னை:
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி ஒன்றுக்கு மலேசியாவில் இருந்து ரூ200 கோடியை ஹவாலா நெட்வொர்க் மூலம் கடத்தி வர இருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தல் களத்தில் தொடர்ந்து சிக்கும் பெருமளவு பணம் பெரும் புயலையே கிளப்பிக் கொண்டிருக்கிறது.
அதேநேரத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து பல இடங்களில் வருமான வரித்துறை
அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மலேசியாவில் இருந்து சென்னை வந்த வினோத் குமார் ஜோசப் எனபவரை விமான நிலையத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
வினோத் குமாரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் தமிழ்நாட்டின் அரசியல் கட்சி ஒன்றுக்காக தேர்தல் செலவுகளுக்கு ரூ200 கோடியை ஹவாலா நெட்வொர்க் மூலம் கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
வினோத்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 7:45 pm
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
April 29, 2024, 11:50 am
தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்வு
April 28, 2024, 1:34 pm
மீண்டும் ஆரம்பமாகிறது இலங்கை நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை
April 28, 2024, 11:59 am
அயன் பட பாணியில் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய குருவி கைது
April 27, 2024, 11:52 am
லுங்கி அணிந்தபடி மூட்டைகளை தூக்கிச் செல்லும் புதுவை முன்னாள் அமைச்சர்: வைரலாகும் காணொலி
April 25, 2024, 6:56 pm
மோடியின் மத வெறுப்பு பிரசார பேச்சுக்கு சீமான் கடும் கண்டனம்
April 23, 2024, 5:20 pm