நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தைவானில் நிலநடுக்கம்; பிலிப்பைன்ஸ் நாட்டிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 

மனிலா: 

தைவானில் காலை வேளையில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் அந்நாட்டிற்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலேசியாவின் அண்டை நாடான பிலிப்பைன்ஸ் நாட்டிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேரலையாக சுனாமி பேரிடர் நிகழக்கூடும் என்று பிலிப்பைன்ஸ் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

23 பிரதேசங்களைச் சார்ந்த கடலோர பகுதிகளில் இந்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காலை 8.33 மணிக்கும் பிறகு 10.33 மணிக்கும் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்று அனுமாணிக்கப்பட்டுள்ளது. 

கடலோர பகுதிகள் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset