நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு 

தைப்பேய்: 

தைவானில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

புதன்கிழமை காலையில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் ஹுவாலியேன் பகுதியில் அமைந்திருக்கும் கட்டிடங்களும் குடியிருப்பு பகுதிகளும் ஆட்டங்கண்டன. 

அத்துடன் அங்குள்ள மக்கள் நிலநடுக்கத்தால் சிக்கிக்கொண்டுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலநடுக்கம் சீனாவின் ஷங்காய் பகுதியிலும் உணரப்பட்டதாக REUTERS செய்தி நிறுவனம் தெரிவித்தது. 

ஜப்பான் நாட்டிலும் இந்த நிலநடுக்கம் லேசாக உணரப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 

தென்கிழக்காசியாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் கடலோரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

1999ஆம் ஆண்டுக்குப் பிறகு தைவானில் இன்று 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக தைவான் அரசு ஊடகம் தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset