செய்திகள் உலகம்
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
தைப்பேய்:
தைவானில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலையில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் ஹுவாலியேன் பகுதியில் அமைந்திருக்கும் கட்டிடங்களும் குடியிருப்பு பகுதிகளும் ஆட்டங்கண்டன.
அத்துடன் அங்குள்ள மக்கள் நிலநடுக்கத்தால் சிக்கிக்கொண்டுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலநடுக்கம் சீனாவின் ஷங்காய் பகுதியிலும் உணரப்பட்டதாக REUTERS செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஜப்பான் நாட்டிலும் இந்த நிலநடுக்கம் லேசாக உணரப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
தென்கிழக்காசியாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் கடலோரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
1999ஆம் ஆண்டுக்குப் பிறகு தைவானில் இன்று 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக தைவான் அரசு ஊடகம் தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am