நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது: இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் 

கொழும்பு: 

கச்சத்தீவைப் பொறுத்தவரை அது இலங்கையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று இலங்கை நாட்டின் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்தார். 

கச்சத்தீவை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு தொடங்கி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில் இலங்கை அரசு அதனை மறுத்துள்ளது. 

கச்சத்தீவு தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அனுப்பவில்லை. கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை என்று ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். 

இந்திய மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில்  கச்சத்தீவு விவகாரம் அரசியல் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இருப்பினும், கச்சத்தீவு இன்னும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அவர் மீண்டும் உறுதிப்பட தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset