செய்திகள் உலகம்
அமெரிக்கா மேம்பாலத்தை மோதிய சரக்கு கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் இந்தியர்கள் தான்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பிரமாண்ட பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
கப்பல் மோதியதால் மொத்த பாலமும் உருக்குலைந்தது தண்ணீக்குள் விழுந்தது.
இந்நிலையில் தான் அந்த கப்பலின் குழுவில் இருந்த 22 பேரும் இந்தியர்கள் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அமரிக்காவின் பால்டிமோர் நகரில் படப்ஸ்கோ ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரும்பாலனா பிரமாண்டமாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் தினமும் வாகனங்கள் சென்று வருகின்றனர்.
இந்த பாலத்துக்கு கீழே கப்பல்கள் சென்று வருகின்றன. ஒரே நேரத்தில் பாலத்தின் மேல்புறம் கார் உள்ளிட்ட வாகனங்களும் கப்பலுக்கு கீழே ஆற்று தண்ணீரில் கப்பல்களும் செல்வதை நாம் பார்க்கலாம்.
இந்நிலையில் தான் அமெரிக்காவின் ல்டிமோர் பாலத்தின் மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியது.
இதனால் அந்த மொத்த பாலமும் உருக்குலைந்துபோனது.
இதனால் பாலத்தில் சென்ற வாகனங்கள் தண்ணீருக்குள் விழுந்தன.
மேலும் விபத்து நடந்தவுடன் மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்ணீரில் தத்தளித்தவர்களை அவர்கள் மீட்டனர் .
இந்நிலையில் கப்பலில் உள்ள குழுவில் இருக்கும் அனைவரும் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ள.
அதாவது கப்பலை இயக்கும் குழுவில் அங்கம் வகிக்கும் 22 பேரும் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனை சினர்ஜி மரைன் குழு உறுதி செய்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am
காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்கள் உடனே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
April 23, 2024, 6:02 pm