நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

CSK அணியின் தலைவராக தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை: 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கோப்பை அறிமுக விழாவில் சென்னை அணி சார்பில் தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கலந்துகொண்ட நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் நிர்வாகம் ஐபிஎல் கோப்பை உடன் அணிகளின் கேப்டன்கள் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளது. 

அதில், 9 கேப்டன்கள் உடன் பஞ்சாப் அணியின் துணை கேப்டன் ஜிதேஷ் ஷர்மா என்று குறிப்பிட்டுள்ளது. 

இந்தப் படத்தில் சென்னை அணி சார்பில் தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார்.

தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்று குறிப்பிட்டே ருதுராஜ் கெய்க்வாட்டை ஐபிஎல் நிர்வாகம் அடுத்த பதிவை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவி வருகிறது. 

இந்தப் பதிவுக்கு கீழ், 'அப்படியெனில் தோனியின் பங்கு என்ன?' என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சில தினங்கள் முன் எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய ரோலில் களம் காண உள்ளதாக மகேந்திர சிங் தோனி முகனூலில் பதிவிட்டு இருந்தார். 

அப்போதே கேப்டன் பதவியை தோனி துறக்க போகிறாரா என்ற பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், எதற்கும் விடை கிடைக்கவில்லை. 

சில தினங்கள் முன் சென்னை வந்த தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அணியில் முக்கிய வீரராக மட்டுமே அவர் செயல்படுவார் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset