நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

செங்கடலில் 5 பிள்ளைகளுடன் கொண்டாட்டத்தில் ரொனால்டோ: வைரலாகும் புகைப்படம்

ரியாத்:

போர்த்துக்கல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபடும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

அல் நசர் அணியில் விளையாடி வரும் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல் அஹ்லி அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்து தமது அணியை வெற்றி பெற வைத்தார். 

இந்த வெற்றியின் மூலம் அல் நசர் அணி 56 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. 

31ஆம் தேதி நடைபெற உள்ள அல் டாய் அணிக்கு எதிரான போட்டியில் அடுத்ததாக அல் நசர் விளையாட உள்ளது. 

இதற்கிடையே 10 நாட்கள் இடைவெளி உள்ளதால், ரொனால்டோ தனது குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாடத் தொடங்கியுள்ளார்.

தனது மனைவி, 5 பிள்ளைகளுடன் அவர், அரேபியாவின் செங்கடல் கடற்கரையில் பொழுதினை கழிக்கும் புகைப்படங்களை தன் எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset