
செய்திகள் தமிழ் தொடர்புகள்
பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக; இன்று கையெழுத்தாகிறது தொகுதி உடன்படிக்கை
சென்னை:
பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான உடன்படிக்கை இன்று கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தமிழக அரசியல் கட்சிகள் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் பாமகவை இழுக்க முயற்சிகள் மேறகொள்ளப்பட்ட நிலையில் பாமகவின் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
அனைத்து அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் என்று பாமக அறிவித்திருந்தது.
இதற்கு முன் பாமக அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்த்த வேளையில் பாமக பாஜகவுடன் இணைந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 8:36 am
கொடைக்கானலில் கோடைவிழா: மலர்க் கண்காட்சிக்குத் தயாராகி வருகிறது பிரையன்ட் பூங்கா
May 3, 2025, 7:24 pm