நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2024-ஐபிஎல் போட்டியின் அட்டவணை இன்று வெளியிடப்படும்

டெல்லி:

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. 

இவ்வாண்டு அனைத்துப் போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெறும் என்று ஐ.பி.எல். தலைவர் அருன் துமால் உறுதிப்படுத்தினார். 

மேலும், மார்ச் 22-ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் துவங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக ஐபிஎல் தொடரின் முதல் 15 நாட்களுக்கான அட்டவணையை மட்டும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். 

தொடரின் மீதமுள்ள போட்டிகள் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திட்டமிடப்பட இருக்கிறது.

இந்நிலையில் இவ்வாண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில், கடந்த ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset