செய்திகள் உலகம்
மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய்: பக்கிங்ஹாம் அரண்மனையில் பரபரப்பு
லண்டன்:
இங்கிலாந்து அரசப் பரம்பரையின் தற்போதைய அரசர், மூன்றாம் சார்லஸ் (வயது 75). புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவரது தாயார் அரசி இரண்டாம் எலிசபெத் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார்.
அதை தொடர்ந்து மூன்றாம் சார்லஸ் அரசராக பதவி ஏற்றார்.
சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சினையால் அரசர் சார்லஸ் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக அவர் லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அரசருக்கு புற்றுநோயின் ஒரு வகை கண்டறியப்பட்டு உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
புரோஸ்டேட் சிகிச்சைகாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், புரோஸ்டேட் சிகிச்சைகாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற போது அவருக்கு மேலும் சில பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தது.
அதன்பிறகு நடந்த பரிசோதனையில் அவருக்கு புற்றுநோயின் ஒரு வகை தாக்கம் உடலில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இதற்காக மன்னருக்கு வழக்கமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மன்னர் சிகிச்சையில் இருப்பதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
எனினும் சிகிச்சை கால கட்டத்தில் அரசு பணிகள் மற்றும் ஆவணப் பணிகளை அரசர் வழக்கம் போல் மேற்கொள்வார்.
மன்னர் விரைவில் குணமடைந்து பொதுபணிக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am