செய்திகள் தமிழ் தொடர்புகள்
மாநில அரசுகள் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும்: சுகாதாரத் துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங்
ராமேசுவரம்:
கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் தெரிவித்தார்.
ராமேசுவரத்தில் நேற்று நடைபெற்ற ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் சுகாதாரத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கொரோனா, ஜேஎன்-1 திரிபு வைரஸ் பரவல் தொடர்பாக மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
தற்போது வரை மிகவும் குறைவான தொற்று பரவல் மட்டுமே உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாநில அரசு பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வழிமுறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் தொற்று பரவலை முன்கூட்டியே தடுக்க முடியும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 11:50 am
தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்வு
April 28, 2024, 1:34 pm
மீண்டும் ஆரம்பமாகிறது இலங்கை நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை
April 28, 2024, 11:59 am
அயன் பட பாணியில் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய குருவி கைது
April 27, 2024, 11:52 am
லுங்கி அணிந்தபடி மூட்டைகளை தூக்கிச் செல்லும் புதுவை முன்னாள் அமைச்சர்: வைரலாகும் காணொலி
April 25, 2024, 6:56 pm
மோடியின் மத வெறுப்பு பிரசார பேச்சுக்கு சீமான் கடும் கண்டனம்
April 23, 2024, 5:20 pm