நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஆளுநர் ரவியை சந்தித்தார் ஸ்டாலின்: மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தல்

 சென்னை:  

தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு  அனுப்பி வைக்கப்பட்ட 10 முக்கிய மசோதாக்களை திரும்பப் பெற்று ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் வரை இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இரு தரப்பினரும் பிரச்னைகளை சுமூகமாக தீர்த்து கொள்ள நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ள தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஆளுநரை சந்தி்தது முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பு சமூகமாக நடந்ததாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset