நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானார்

சென்னை: 

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று நோய் பாதிப்புக்கு ஆளானதால் உயிரிழந்தார். இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாலும் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் பிரிந்தது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை அவர் மருத்தவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அப்போது தேமுதிக சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் வழக்கமான மருத்துவ பரிசோதனை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். ஏற்கெனவே அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த 12-ம் தேதி தான் விஜயகாந்த் வீடு திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset