செய்திகள் தமிழ் தொடர்புகள்
மிக்ஜாம் புயல்: சென்னைக்கு விரையும் வெளி மாவட்ட தூய்மைப் பணியாளர்கள்
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது.
இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், மீட்பு பணிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் சென்னை விரைந்துள்ளனர்.
அந்த வகையில் திருச்சி மாநகராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் 250 பேர் சென்னை புறப்பட்டுள்ளனர். இவர்கள் ஐந்து பேருந்துகளில் வர்ய்கின்றனர்.
அதேபோல திருவாரூர் மாவட்டத்தில் இருந்து திருவாரூர் நகராட்சியின் தூய்மை பணியாளர்கள், அலுவலர்கள் என 48 பேர் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.
“மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்திலிருந்து சுகாதார மேற்பார்வையாளர்கள், தொழிலாளர்கள் 100 பேர் பணிக்கு தேவையான பிளீச்சிங் பவுடர், மரம் வெட்டும் இயந்திரங்கள், துப்புரவு உபகரணங்களோடு காஞ்சிபுரம் புறப்பட்டு உள்ளனர்” என அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் களப்பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 7:45 pm
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
April 29, 2024, 11:50 am
தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்வு
April 28, 2024, 1:34 pm
மீண்டும் ஆரம்பமாகிறது இலங்கை நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை
April 28, 2024, 11:59 am
அயன் பட பாணியில் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய குருவி கைது
April 27, 2024, 11:52 am
லுங்கி அணிந்தபடி மூட்டைகளை தூக்கிச் செல்லும் புதுவை முன்னாள் அமைச்சர்: வைரலாகும் காணொலி
April 25, 2024, 6:56 pm
மோடியின் மத வெறுப்பு பிரசார பேச்சுக்கு சீமான் கடும் கண்டனம்
April 23, 2024, 5:20 pm