செய்திகள் தமிழ் தொடர்புகள்
டிசம்பர் 3 - மாற்றுத்திறனாளிகள் நாள்: மாற்றுத்திறனாளிகளுடன் தோளோடு தோள் சேர்ந்து நிற்போம்: எம் எச் ஜவாஹிருல்லா
சென்னை:
மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அக் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கூறினார்.
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ. நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.
சமூகம் மற்றும் வளர்ச்சியின் ஒவ்வொரு மட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் கட்டாயம் பேணப்பட வேண்டும். அவர்களின் நல்வாழ்வை ஊக்குவிக்கவும் மன அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுடன் தோளோடு தோள் சேர்ந்து நிற்போம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் தடைகள், மனத்தடைகள், பொருளாதாரத் தடைகள் நீங்க முழு ஒத்துழைப்பு நல்கச் சூளுரைப்போம் என்று பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 2:46 pm
தமிழகத்தில் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகள் நாளை செயல்படும் என்று அறிவிப்பு
October 23, 2025, 7:49 pm
5 தொகுதிகள் வேண்டும்: ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொஹைதீன் எதிர்பார்ப்பு
October 23, 2025, 4:52 pm
காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை
October 21, 2025, 12:48 pm
வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை தொடரும் என அறிவிப்பு
October 20, 2025, 11:11 am
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: அடுத்த 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்
October 19, 2025, 4:18 pm
ஏழை-எளியவர்களின் மகிழ்ச்சி கலந்ததே பண்டிகை: தீபாவளி நிகழ்ச்சியில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு
October 19, 2025, 9:48 am
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக இயக்கப்பட்ட பேருந்துகளில் 6,15,992 பயணிகள் பயணம்
October 18, 2025, 10:52 pm
தவெக சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம்: தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்
October 18, 2025, 8:49 am
