செய்திகள் உலகம்
கனடாவில் இ-விசா சேவையை தொடங்கியது இந்தியா
புது டெல்லி:
2 மாதங்களுக்கு பிறகு கனடா நாட்டவருக்கான இ - விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையே இருந்த பிரச்சனை சற்று தணிந்துள்ளது.
வணிக விசா, மருத்துவ விசா, மாநாட்டு விசா உள்ளிட்ட விசாக்களை வழங்கும் பணிகளை கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கனடா பாஸ்போர்ட் வைத்துள்ள அனைத்து கனடா குடிமக்களுக்கும் இந்தியாவுக்கான இவிசா வழங்கும் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் ஜூன் 18ம் தேதி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.
இதை மறுத்த இந்தியா, கனடா நாட்டவருக்கான விசா உள்ளிட்ட தூதரக சேவைகள் நிறுத்தி வைத்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am