
செய்திகள் மலேசியா
சாலையோரத்தில் பிளாஸ்டிக் பொட்டலத்தில் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
கோலாலம்பூர் :
பிளாஸ்டிக் பொட்டலத்தில் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்டார் சன்வே, சுபாங் ஜெயா சாலையோரத்தில் நேற்று மதியம் 1.25 மணியளவில் பொதுமக்களால் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது என சுபாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “
மருத்துவ அதிகாரியின் முதல் கட்ட பரிசோதனையின் முடிவில் அக்குழந்தை சீரான நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அக்குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்குரிய நபரை அடையாளம் காண சிசிடிவி கேமரா இல்லை.
அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 317 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 12:26 am
சிகாம்புட் தொகுதி இந்தியர்களுக்கு மஇகா உரிய சேவைகளை வழங்கும்: டத்தோ சிவக்குமார்
July 14, 2025, 6:14 pm
நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்கும் பேரணி வெற்றி: மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் அறிவிப்பு
July 14, 2025, 6:00 pm
நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்கவே பேரணியில் கலந்து கொண்டேன்: நூருல் இசா
July 14, 2025, 5:45 pm
மன்னிப்பு கேட்ட மகாதீர்: பிறந்தநாள் பிக்னிக்கில் உடல்நலக்குறைவு
July 14, 2025, 5:41 pm
லோரிக்குள் சிக்கிய ஓட்டுநர் உயிரிழந்தார்: காரில் பயணித்தவருக்கு கால் முறிந்தது
July 14, 2025, 5:33 pm
கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்ற லாரியின் காணொலி வைரல்
July 14, 2025, 5:29 pm
குறைந்த கட்டணச் சேவையே கேடிஎம் லாபம் ஈட்டாததற்குக் காரணம்: அந்தோனி லோக்
July 14, 2025, 4:56 pm
பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்தனர்
July 14, 2025, 3:12 pm
வழக்கறிஞர்கள் பேரணியில் பங்கேற்ற முக்கியத் தலைவர்கள்
July 14, 2025, 3:11 pm