
செய்திகள் மலேசியா
சாலையோரத்தில் பிளாஸ்டிக் பொட்டலத்தில் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
கோலாலம்பூர் :
பிளாஸ்டிக் பொட்டலத்தில் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்டார் சன்வே, சுபாங் ஜெயா சாலையோரத்தில் நேற்று மதியம் 1.25 மணியளவில் பொதுமக்களால் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது என சுபாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “
மருத்துவ அதிகாரியின் முதல் கட்ட பரிசோதனையின் முடிவில் அக்குழந்தை சீரான நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அக்குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்குரிய நபரை அடையாளம் காண சிசிடிவி கேமரா இல்லை.
அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 317 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 3, 2023, 2:33 pm
நாட்டில் கோவிட்-19 நோய் தொற்றுகளின் சம்பவங்கள் 57% அதிகரிப்பு : டாக்டர் ராட்ஸி அபு ஹாசன்
December 3, 2023, 2:06 pm
தமிழ் - சீனப் பள்ளிகள் குறித்து இனியும் கேள்வி எழுப்ப தேவையில்லை: அமைச்சர் சிவக்குமார்
December 3, 2023, 1:00 pm
எம்ஏசிசி-க்கு எதிராக நீதித்துறை மறுஆய்வுக்கு விண்ணப்பிக்க அமான் பாலஸ்தீன் நிறுவனம் தயார்
December 3, 2023, 12:58 pm
உலகளவில் இந்திய வம்சாவளி மக்களை ஒருங்கிணைக்கும் கோபியோ பணி போற்றுதலுக்குரியது: மனிதவள அமைச்சர் சிவக்குமார்
December 3, 2023, 12:19 pm
சந்திரயான் -1 திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமியுடன் அமைச்சர் சிவக்குமார் சந்திப்பு
December 3, 2023, 11:25 am
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
December 3, 2023, 11:09 am
கடலில் காணாமல் போன 1,365 பேரை மலேசிய கடல்சார் அமலாக்க துறை மீட்டுள்ளது
December 3, 2023, 11:07 am
வெள்ளத்தால் தேர்வு எழுத வர இயலவில்லையென்றால் உடனடியாகத் தெரிவிக்கவும் : ஃபட்லினா சிடேக்
December 2, 2023, 6:02 pm
எலித் தொல்லைக்கு ஆளான கொலம்பியா தமிழ்ப்பள்ளிக்கு தீர்வு
December 2, 2023, 5:38 pm