நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சுரங்க ஊழல் குற்றச்சாட்டு: பதவி விலகினார் போர்ச்சுகல் பிரதமர்

லிஸ்பன்:

லித்தியம் சுரங்க ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட உடன் போர்ச்சுகல் பிரதமர் அன்டினோ கோஸ்டா ராஜிநாமா செய்தார்.

போர்ச்சுகலில் லித்தியம் சுரங்கங்களுக்கு சலுகை அளித்ததில் ஊழல் நடைபெற்றதாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையில் பிரதமர் அலுவலக தலைமை அதிகாரி விக்டர் எஸ்கிரியாவை போலீஸார் கைது செய்தனர்.

அமைச்சர்களின் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது, பிரதமருக்கும் ஊழலில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் அன்டினோ கோஸ்டா, அதிபரிடம் ராஜிநாமா கடிதத்தை அளித்ததாக தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset