நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவில் மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

ஹூஸ்டன்:

அமெரிக்காவில் மனைவியை கத்தியால் குத்திப் படுகொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் செங்கனாசேரியை சேர்ந்தவர் ஃபிலிப் மேத்யூ அதே மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் மெரின் ஜாய் இருவருக்கும் திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வந்தனர்.

மெரின் குடும்ப துன்புறுத்தலை அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவரைவிட்டுப் பிரிந்த மெரின், அந்நாட்டின் ஃபுளேரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2020ம் ஆண்டு அந்த மருத்துவமனைக்குச் சென்ற மேத்யூ, அங்குள்ள கார் நிறுத்துமிடத்தில் மெரினை கூர்மையான ஆயுதத்தால் 17 முறை குத்தினார். அதன் பின்னர் அவர் மீது மேத்யூ காரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றார். இதில் பலத்த காயமடைந்த மெரின் உயிரிழந்தார்.

இதையடுத்து மேத்யூவை கைது செய்த காவல் துறையினர், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றத்தை மேத்யூ ஒப்புக் கொண்டதால் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset