நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: 19 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலி

கீவ்:

உக்ரைனில் ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற கட்டடத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஸபோரிஷியா பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

போர்க் காலத்தில்,இத்தகைய நிகழ்ச்சி போர் முனைக்கு அருகே நடைபெற்றது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ருஸ்தம் உமெரொவ் கூறினார்.

இதனிடையே உக்ரைன் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் தங்களது கப்பல் சேதமடைந்ததாக ரஷியா கூறியுள்ளது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset