நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

டான்ஸ்ரீ உபைதுல்லா மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சி பாராட்டுதலுக்குரியது: ஜவாஹிருல்லாஹ் 

பாபநாசம்:

இராஜகிரி டான் ஸ்ரீ உபைதுல்லா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. 

சிறப்புரையாற்றிய பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர் பெருமக்கள், பள்ளி பணியாளர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளின் ஆக்கப்பூர்வமான கலை நிகழ்ச்சிகளை காண முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.

ராஜகிரி மண்ணை சேர்ந்த டான் ஸ்ரீ உபைதுல்லா மலேசியாவில் ஒரு மாபெரும் அரசியல் தலைவராக எல்லா சமூகத்தவராலும் போற்றப்படும் ஒரு தலைவராக செயலாற்றியவர். தாம் பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த அழகிய கல்விக்கூடத்தை ஆரம்பித்தார். அவருக்கு பிறகும் அவரது குடும்பத்தினர் இதனை சிறப்பாக வழிநடத்துவது போற்றுதலுக்குரியது என்று ஜவாஹிருல்லா பேசினார். 

May be an image of 1 person, crowd and temple

பள்ளி தாளாளர் ஹாஜி ஆர்.ஏ.நூர் முஹம்மது, பாரூக், பள்ளி தலைமையாசிரியர் விமலா, ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன், பாபநாசம் சாதிக் பாட்சா, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் புழல் ஷேக் முஹம்மது அலி, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்ட பொருளாளர் பொகர்தீன், பாபநாசம் ஒன்றிய தலைவர் கலீல் ரஹ்மான், ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, பாபநாசம் பேரூர் நிர்வாகி ஜாகிர் உசேன், சுவாமிமலை பேரூர் தலைவர் புர்க்கான் அலி, மாணவர்கள், பெற்றோர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- செய்திப் பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset