நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாஃப் எழுதிய நூல் வெளியீட்டு விழா

ஷார்ஜா:

ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகம்,  அபுதாபி அய்மான் சங்கமும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து கோவை டாக்டர்  அமீர் அல்தாஃப் எழுதிய குறளும், குர்ஆனும் கற்றுத்தரும் வாழ்வியல் உள்ளிட்ட நான்கு நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் பீ.மு.மன்சூர் தலைமை வகித்தார். 

அவர் தனது உரையில் குறளும், குர் ஆனும் கற்றுத்தரும் வாழ்வியல் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினார். குறளின் கருத்துக்களையும், குர்ஆனின் கருத்தியலை ஒப்புநோக்கி இன்றைய சமூகத்துக்கு தேவையான வகையில் நூலை படைத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.  

அபுதாபி அய்மான் பைத்துல்மால் அமைப்பின் தலைவர் அதிரை சாகுல் ஹமீது ஹாஜியார் முன்னிலை வகித்தார்.

திண்டுக்கல் மாணவர்கள் ஹம்தான், அத்னான் ஆகியோர் இறைவசனங்களை ஓதினர். தஞ்சை மாணவர்கள் முகுந்தன் பாலன், மிர்துளா ஆகியோர் திருக்குறளை பொருளுடன் வாசித்தனர்.

இஸ்லாமிய இலக்கிய கழக அமீரக ஒருங்கிணைப்பாளர்கள் முஹம்மது மஃஹ்ஃரூப் தொடக்கவுரையும், மூத்த பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரையும் நிகழ்த்தினர்.

ஏசு பிரானின் சத்தியத்தூது  என்ற நூலின் ஆய்வுரையை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு பொதுச்செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் மற்றும் பொறியியல் துறை தலைவர் பேராசிரியர் முனைவர். சித்திரை பொன் செல்வன் விஞ்ஞானப் பேரற்புதங்களாய் கடல்களும், விலங்குகளும் என்ற நூல் குறித்த ஆய்வுரையும், கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முஹைதீன் விண்ணிலும், மண்ணிலும் மறைந்திருக்கும் ரகசியங்கள் என்ற நூல் குறித்த ஆய்வுரையும் நிகழ்த்தினர்.

அமீரக இந்திய நல்வாழ்வு பேரவையின் துணைத்தலைவர் பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம், துபாய் மண்டல செயலாளர் வி. களத்தூர் உமர் ஃபாரூக், ஃபார்ம் பாஸ்கெட் உரிமையாளர் வலசை பைசல், இலக்கிய ஆர்வலர் சான்யோ, அபுதாபி அய்மான் சங்க நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹைதீன் அப்துல் காதர், ஆடிட்டர் ஜலால், புதுக்கோட்டை காதர் ஹுசைன், தஞ்சை மன்னர் மன்னன், கட்டுமாவடி பைசல் ரஹ்மான், மணமேல்குடி அம்ஜத் கான், சொறிப்பாரைப்பட்டி ஜாஹிர் ஹுசைன், குவைத் ஆசாத் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.

பன்னூலாசிரியர் கோவை டாக்டர் அமீர் அல்தாஃப் ஏற்புரை நிகழ்த்தினார். 

முனைவர் டி.கே.டி. ஷேக் அப்துல்லாஹ் மறைந்த அரபி மொழி அறிஞர் அப்துர் ரஹீம் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

அபுதாபி அய்மான் சங்க பொதுச் செயலாளர் லால்பேட்டை மௌலவி முஹம்மது அப்பாஸ் நன்றியுரை நிகழ்த்தினார். 

- முதுவை ஹிதாயத்

தொடர்புடைய செய்திகள்

+ - reset